குறிப்பாக பங்குச் சந்தையின் வர்த்தக முறை, நெளிவு சுளிவுகள் தெரியாமல், சில பத்திரிக்கைகளில் வரும் பேராசை கொள்ளச் செய்யும் கட்டுரைகள், புரோக்கரிகளின் தேன் குழையும் அறிவுரைகளால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நட்டம் அடைய வேண்டியதுதான்.
புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையின் கதையாக தான் முடியும்.
இதற்காகத்தான் இந்திய முதலீட்டுச் சந்தையை பாதுகாக்க செபி சில ஆலோசனைகளை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே மும்பை பங்குச் சந்தையில் 1,743 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 525 புள்ளிகள் சரிந்தது.
இதனால் இரண்டு பங்குச் சந்தைகளிலுமே ஒரு மணி நேரம் வர்த்தம் நிறுத்தப்பட்டது.
உடனே மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களை பார்டிசிபேட்டரி நோட் முறையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தடை விதிக்கும் நோக்கம் இல்லை என்று அவசரமாக அறிவித்தார். இதன் பிறகே நிலைமை சீராக தொடங்கியது.
இந்த மிரட்டல் இனி தினசரி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த வாரத்தில் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பங்குச் சந்தையில் ஊக வணிகம் நடக்கின்றது என்று எச்சரித்தார். அத்துடன் சிறு முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளை வாங்காமல், பரஸ்பர நிதி மூலம் பங்குச் சந்தையில் பங்கு பெறும் படி அறிவுறுத்தினார்.
அதே சிதம்பரம் தான், நேற்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பாதிப்பு ஏற்படும் படி எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|