முதன்மை பக்கம்  செய்திகள் > நிதி > கட்டுரைகள்
 
பங்குச் சந்தை : பார்டிசிப்பேட்டரி நோட் மிரட்டல்?
அதே போல ஃப்யூச்சர் டிரேடிங் ஈடுபட அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் பார்டிசிபேட்டரி நோட் மூலம் பங்கு பெறுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று செபி கூறியது.

இவை எல்லாம் உடனயாக அமல்படுத்தப் போவதில்லை. செபி செவ்வாய் கிழமை அறிவித்தது ஆலோசனைக்கான அறிவிப்புதான்.

தனிப்பட்ட பெரும் செல்வந்தர்களிடம் உள்ள பணத்தை மூதலீட்டு நிறுவனங்கள் பெற்று இந்த பார்டிசிபேட்டரி நோட் மூலம் பங்குகளை வாங்குகின்றன. இதை சரியாக கூறுவது என்றால் அடையாளம் தெரியாத மூன்றாவது மனிதருக்காக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குகின்றன. அதே போல் விற்பனை செய்கின்றன. சில நிறுவனங்களின் மீது இவர்களுக்கு (மூனறாவது மனிதருக்கு) உள்ள விருப்பு வெறுப்பின் படி, குறிப்பிட்ட பங்குகளின் விலைகளை அதிகரிக்கவும், குறைக்கவும் முடிகிறது. இதை வேறு விதமாக கூறுவதென்றால், ஒரு நிறுவனத்தின் அல்லது சில நிறுவனங்களின் மிக குறைந்த விழுக்காடு பங்குகளை வாங்கி, அதன் விலையை அதிகரித்து அல்லது குறைத்து பங்குகளின் விலை நிலவரத்தையே மாற்றி அமைக்கலாம்.

இவர்கள் பெரும்பாலும் பங்குகளை வாங்குவதில்லை. ப்யூச்சர் டிரேடிங் என அழைக்கப்படும் முன் பேர வர்த்தக முறையில் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இந்த பங்குகளின் விலையில் மிக குறைந்த விழுக்காடு பணமே செலுத்தி பங்குகளை வாங்குகின்றனர்.

முன் பேர வர்த்தகத்தில் நிர்ணயிக்கப்படும் விலை, உடனே ரொக்கம் கொடுத்து வாங்கும் பங்குகளின் விலையில் பிரதிபலிக்கும். பங்குகளின் விலைகள் சரியும் போது, முன் பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு மிக சிறிய தொகையாக இருக்கும். அதே நேரத்தில் ரொக்கமாக பணம் கொடுத்து பங்குகளை வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் அதிக நஷ்டம் அடைய நேரிடும்.
 << 1 | 2 | 3  >> 
மேலும்
இந்தியாவில் கடன் நிதி நெருக்கடி ஆபத்து!
கிராம்பு விலை அதிகரிக்கும்!
ஏற்றுமதி, இறக்குமதியை பாதிக்கும் அரசின் முடிவு!
இயற்கை உரத்தால் விவசாயிகளின் வருவாய் உயர்வு!
மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....
தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி 13.6 மில்லியன் டன்கள் !