பெற்றோருக்கு பிடித்தது போல நடை, உடை, பாவனைகள் எல்லாம் காதலரிடம் ஒப்பித்துவிட்டிருந்தாலும் பார்த்த மாத்திரத்தில் பிடிக்காமல் போய்விடும் அபாயமும் உள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நன்கு பேசிக் கொண்டிருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பூகம்பம் வெடிக்கலாம். ஏனெனில் இந்த சந்திப்பு இரண்டு பகை நாட்டுத் தளபதிகளின் சந்திப்பைப் போன்றதுதான்.
ஒரு சில பெற்றோர் வேண்டுமானால் ரொம்ப விட்டுக் கொடுத்து முழு மனதுடன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டலாம். பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளை காதலிப்பதை அறிந்து கொதித்து பின்னர் காதலரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிடுவார்கள்.
இந்த சந்திப்பின் மூலம் காதலரிடம் குறை காண மட்டும் பெற்றோர்கள் காத்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் காதலர்கள் என்னதான் அமைதியாக, விட்டுக் கொடுத்துப் பேசினாலும் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த தருணம் எப்படி இருக்கும் என்பதை நம்மில் பாதி பேர் உணர்ந்திருப்பார்கள்.
இந்த சமயத்தில் நமது அச்ச உணர்ச்சியே நமக்கு பகையாகிவிடும். எனவே இதுபோன்ற தருணத்தில் நாம் மிக அமைதியாக, எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது இயல்பான நிலையே நமது காதலருக்கும் அமைதியைக் கொடுக்கும். இதனால் இந்த சந்திப்பு வெற்றி பெற வழி ஏற்படும். நாமே நமது காதலரை கலங்கச் செய்துவிடக் கூடாது.
நீங்கள் இயல்பாக இருந்து உங்கள் காதலரையும் இயல்பாக இருக்கவிட்டு, உங்கள் காதலை வாழ வையுங்கள்.
காதலர்கள் பெற்றோரைக் கவர சில குறிப்புகள் - அடுத்த கட்டுரையில்
|