ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்.
ஹைக்கூ கவிதைகள்
* வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...!
* குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...!
* மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி!
* காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு!
* மரண அறிவித்தல் தவளையின் சப்தம்
* சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
|