முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > பேட்டிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழறிஞர் ஆ. கந்தையா – தமிழ்ப் பணியே மூச்சு!
நீங்கள் எந்த ஆண்டைக் குறிப்பிடுகிறீர்கள்?

book
webdunia photoWD
1977ஆம் ஆண்டில் இருந்து 83ஆம் ஆண்டு வரை எவ்விதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்து வந்தோம். எனது துணைவியார் ஒரு பரதநாட்டிய ஆசிரியை. இந்தச் சூழ்நிலையில்தான் இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்டது.

எனக்கு இலங்கை அரசாங்கத்தில் நல்ல ஆதரவு இருந்தது. அதை உங்களுக்குக் கூறிட வேண்டும். கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தேன்.

தமிழ் இளைஞர்களை தமிழ் மொழியில் ஆசிரியர்களாக உருவாக்கி பணியில் அமர்த்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அப்படிப்பட்ட நிலையில் இருந்தபோதுதான் இனப்பிரச்சினை எழுந்தது. வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை. ஆனால் வேறு வழியும் இல்லை. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தோம். ஒரு மாதத்திலேயே எங்களுக்கு அனுமதி கிட்டியது. ஆஸ்ட்ரேலியா போய் சேர்ந்தோம்.

அங்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனது துணைவியார் ஒரு நடனப் பள்ளியைத் துவக்கினார். அதில் கற்றுக் கொள்ள மாணவர்கள் வந்தனர். ஆனால் எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நிலையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பல்வேறு மொழிப் படங்களை அதன் ஆங்கில சப் டைட்டிலுடன் ஒளிபரப்பியதைப் பார்த்தேன். இதேப்போல தமிழ்ப் படங்களையும் ஏன் ஒளிபரப்பக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது.

இதனை ஆஸ்ட்ரேலிய ஒளிபரப்பு துறைக்கு கொண்டு சென்றபோது, நீங்கள் ஒரு தமிழ் படத்திற்கு ஆங்கில சப் டைட்டிலை எழுதி கொடுங்கள் என்று பொறுப்பு கொடுத்தனர். முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் (நாயகன்) ஆங்கில டைட்டிலுடன் ஒளிபரப்பப்பட்டது.

இதன்பிறகு நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் நூலகத்திற்குச் சென்றேன். எனது நூல்களை விற்பதற்காகத்தாக் அங்கு சென்றேன். நாங்கள் தமிழ் புத்தகங்களை வாங்குவதில்லை என்று கூறிவிட்டனர்.

மற்ற மொழி புத்தகங்களை வாங்குகின்றனர். ஆனால் தமிழ் புத்தகங்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ் புத்தகங்களை மட்டும் ஏன் வாங்குவதில்லை என்று கேட்டேன். அதற்கு இதுவரை யாரும் தமிழ் புத்தகங்களை கேட்கவில்லை என்று பதில் கூறினர்.

வீட்டிற்குத் திரும்பிய நான், ஆஸ்ட்ரேலிய அரசின் இன அலுவல்கள் ஆய்வுக் குழுவிற்கு ஒரு கடிதம் எழுதினேன்.

ஆஸ்ட்ரேலியா சென்று அங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில் அந்த நாட்டில் எங்கெங்கு எவ்வளவுத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்ற கணக்கை எல்லாம் எடுத்து வைத்திருந்தேன். அதை எல்லாம் எனது கடிதத்தில் சுட்டிக் காட்டி தமிழ் புத்தகங்கள் இல்லாதது ஏன் என்று கேட்டிருந்தே

ஒரு மாதத்தில் தில் வந்தது. உங்களுடைய வேண்டுகோள் ஏற்கப்பட்டது என்றும், விரைவில் தமிழ் புத்தகங்கள் வாங்கப்படும் என்றும் அந்தத் துறை பதில் அளித்திருந்தது.

அதன்பிறகு தமிழ் புத்தகங்களை வாங்கத் துவங்கினார்கள். அவற்றை பட்டியலிடும் பொறுப்பையும் எனக்கு வழங்கினார்கள்.

அத்தோடு நான் நின்றுவிடவில்லை. சிட்னி பல்கலைக்கழகத்தில் ஏன் தமிழ் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதினேன். எனது கடிதத்தைக் கண்டு என்னை அழைத்தார்கள். தமிழ் கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் அளித்தார்கள்.

தமிழ் வகுப்புத் துவக்கப்பட்டது. நன்கு நடைபெற்றது. இரண்டு பருபவங்கள் நடந்தன. தமிழர்கள் மட்டுமின்றி பல இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் தமிழ் கற்க வந்தனர். இதுபோன்று இன்னும் பல முயற்சிகளை மேற்கொண்டே‌ன். தமிழுக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளேன்.

ஆஸ்ட்ரேலியாவில் நூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. இது தெரியுமா உங்களுக்கு

தெரியாது

அங்கு ஆங்கிலம் ஆட்சி மொழி. அல்லாமல் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில்...
<< 1 | 2 | 3 | 4  >>  
மேலும்
குமா‌ர் குமர‌ப்ப‌னி‌ன் நே‌ர்காண‌ல்
நேர்காணல் : எட்வர்ட் சயீத்
கண்டம் கடந்து வாழும் ஐரோப்பிய எழுத்தாளர்
ஜோர்ஜ் லூயி போர்ஹே
பயங்கரவாதம் என்றால் என்ன? - நாம் சாம்ஸ்க்கி
பழைய புத்தகக் காட்சி நூலகம்