முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மேடம் பொவேரி - குஸ்தாவ் ஃபிளாபே (1821-1880)
-ஆர். முத்துக்குமார்.
படித்தாள், வீட்டை அலங்காரம் செய்வதில் ஈடுபடுகிறாள். ஆனால் அவளின் வெறுப்பு ஒரு நோய் கூறு தன்மையை ஏற்படுத்திவிடுகிறது.

சார்லஸ் அவளின் உடல்நலம் கருதி (அவள் தற்போது ஒரு கர்ப்பிணி) வேறொரு சிறிய நகரத்திற்கு குடிபெயர்கிறான்.

இந்த புதிய யான் வில்லி என்ற நகரம் ஒரு தூங்கு மூஞ்சி நகரமாக இருக்கிறது. அங்கு தம்பதியினரை வரவேற்கிறான் ஹோமெய்ஸ் என்ற மருந்துக்டைக்காரன். இவனின் சிப்பந்தியான லியான் எம்மா பொவேரியுடன் ரொமான்டிக் கனவுகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் அவளைக் கவர்கின்றான். எம்மா பொவேரி லியானுடனான காதல் குறித்து மட்டற்ற கனவுகளில் நிலைக்கிறாள். ஆனால் காதல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. லியோனோ இந்த சிறு நகர வாழ்வில் சலிப்புற்று, பாரீஸ் சென்று தன் அதிர்ஷ்டத்தை விருத்தி செய்ய கிளம்புகிறான்.

உணர்ச்சியளவில் மிகவும் பேதலித்துப்போன எம்மா போவேரி அருகிலிருக்கும் திருமணமாகாத நாகரீக ரூடால்ப் போலங்கர் என்பவனால் கவரப்படுகிறாள். இந்த நட்பு அவனைப் பொறுத்தவரையில் ஒரு பொழுதுபோக்கு. ஆனால் பொவேரியோ தான் ஏங்கும் வாழ்வின் லட்சிய வடிகாலே அவன் என்பது போல் மீண்டும் காதல் வயப்படுகிறாள். விளைவைப் பற்றி கவலைப்படாத அவளது அசட்டுத்துணிச்சல் - தன் கணவனுக்கு தெரியாமலேயே - பக்கத்து ஊர் வியாபாரியிடம் நிறைய கடன் வாங்க வைக்கிறது.

இதற்கிடையே மருந்துக்கடைக்காரன் ஹோமெய் கோணக்காலால் அவதியுறும் ஒரு பையனின் காலை சரி செய்யும் அறுவை சிகிச்சைக்காக சார்லஸ் பொவேரியை தூண்டுகிறான். எம்மா பொவேரியும் கணவனின் தொழில் வெற்றிக்காக அவனுடன் உறுதுணையாக இருக்கிறாள். தகுந்த திறமையில்லாமலேயே சார்லஸ் அறுவை சிகிச்சை செய்கிறான். கால் சரி செய்ய முடியாத அளவிற்கு மரத்துப்போய்விட்டதையடுத்து வேறொரு நிபுணர் அந்தப் பையனின் காலை எடுத்துவிடுமாறு ஆலோசனை செய்கிறார். நோயாளியின் கதறல் கிராமத்தினூடாக பரவுவதைத் தொடாந்து சார்லஸ் மனமுடைந்து, தோல்வியால் ஏற்பட்ட அவமானத்தால் வீட்டிலேயே முடங்கிவிடுகிறான். எம்மா பொவேரி கணவனை வெறுக்கிறாள்.

ரூடோல்ப் உடன் வீட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கிறாள். ரூடால்ஃபோ அவளுடனான உறவில் சலிப்படைந்து அவளுடன் நிரந்தரமான உறவு கொள்ள பயம் கொள்கிறான். பழக்கவழக்கங்களை நிறுத்திக் கொள்வோம் என்பதாக அவளுக்கு கடிதமும் எழுதுகிறான். இதனால் கடுமையான உடல் குலைவு ஏற்பட்டு பல மாதங்கள் உடல் நலமில்லாமல் அவதியுறுகிறாள் எம்மா பொவேரி. பிறகு மெதுவாக குணமடையும் அவள் `சமயம்' சார்ந்த சிந்தனைகளில் அதிகம் ஈடுபடுகிறாள். இந்த மத ஈடுபாடும் பழைய ரொமான்டிக் ஈடுபாடு போலவே மிகையுணர்ச்சியுடன்தான் இருக்கிறது. கடைசியில் நன்றாக குணம் அடைந்த பிறகு அவளின் கணவன் ரூயென் நகரத்தின் ஒரு இசை நாடகத்திற்கு அழைத்துச் செல்ல அங்கு தன் பழைய காதலன் லியானை எதேச்சையாக சந்திக்கிறாள். அவன் இப்போது பாரீஸிலிருந்து திரும்பி வந்துவிட்டான்.

லியானுடன் மீண்டும் தன் காதலுறவை ஆரம்பிக்கிறாள் பொவேரி, லியானிடம் இசை கற்றுக் கொள்வதாக நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அவனைச் சந்திக்க வாரம் ஒரு முறை ரூயென் நகரத்திற்குச் செல்ல தொடங்குகிறாள். இந்தப் பயணத்திற்கான பணச் செலவிற்காக..
<< 1 | 2 | 3  >>  
மேலும்
தமிழரின் பண்பாட்டை மீட்டு நிலைநிறுத்திய பதிப்பியல்!
எழுத்தாளர் ஆர்தர்.சி.கிளார்க் மரணம்!
கிரேக்கச் சிந்தனை - எஸ்.வி. ராஜதுரை
ஃபிரான்ஸ் காஃப்கா‌வி‌ன் “விசாரணை”
பூனைகள் இல்லாத வீடு - புத்தக மதிப்பீடு
நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!