முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஃபிரான்ஸ் காஃப்கா‌வி‌ன் “விசாரணை”
ஆர். முத்துக்குமார்
பிரதிபலிப்பு:

19ஆம் நூற்றாண்டு ஜனநாயக அரசுகளின் கீழ் ஒரு சாதரண மனிதனின் நிலை சட்டத்திற்கு முன் என்னவாக ஆகிறது என்பதையும், ஒரு சாதரண தினசரி வாழ்வில் சட்டம் உள்ளே நுழைந்து வெறும் பயத்தையும் குற்றவுணர்வையும் உச்ச கட்டமாக மரணத்தையும் அளித்து விட்டுச் செல்ல முடிகிறது என்பதையும் காஃப்கா மிக நுட்பமாக இந்த புதினத்தில் படைத்துள்ளார்.

சராசரி கல்வியுள்ள ஒரு ஜெர்மன் வங்கி ஊழியருக்கு நடக்கும் பயங்கரங்கள், சாதரண மக்களுக்கு உலகம் முழுதும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரைக்குத்தி குவந்தனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பலர் பைத்தியங்களாகியுள்ளனர் என்பதை நாம் கேள்விப்படுகிறோம்.

இவ்வளவு பத்திரிக்கைகளும், செய்தி ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வரும் இந்தியாவில் கூட, திடீர் கைதுகளும், குற்றம் என்னவென்று சொல்லப்படாமலேயே சிறைகளில் நீண்ட நாட்கள் வைத்திருக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடிதான் உள்ளன.தடா, பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறைகளில் (விசாரணை ஏதுமின்றி) வாடி, வாழ்வை இழந்து பரிதவிப்பதும், மறு புறம் "பெரிய மனிதர்கள்" தங்கள் "செல்வாக்கால்" குற்றங்களிலிருந்து நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு சுலப வழியில் நிரந்தர விடுதலைப் பெறும்போது, குற்றம் செய்தோமா? நாம் என்ன குற்றம்தான் செய்தோம், நம் சிறையிலிருந்து வெளியே வர முடியுமா? சட்டம் நமக்கு உதவுமா? யாராவாது நம்மை காப்பாற்ற மாட்டார்களா? என்று பீதியுடன் அப்பாவிகள் பலர் நம் இந்திய நாட்டின் சிறைகளில் பரிதவித்து வருகின்றனர்.

சட்டமும், ஆட்சி அதிகாரமும் மனிதாபிமான மதிப்பீடுகளை குழி தோண்டி புதைத்து வரும் இந்த காலக் கட்டத்திற்கும் காஃப்கா தனது புதினத்தை எழுதிய காலக்கட்டத்திற்கும் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி இருந்தாலும் அடிப்படையில் எதுவும் இன்னமும் மாறவில்லை. "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்"- இது நம் செவியை குளிரச் செய்யும் தாரக மந்திரம்.

ஆம்! சட்டங்கள் வருவதற்கு "முன்" அனைவரும் சமமாகவே இருந்தனர்.
<< 1 | 2 | 3 | 4 
மேலும்
பூனைகள் இல்லாத வீடு - புத்தக மதிப்பீடு
நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!
நீர்ப்பண்பாடு
டோரிஸ் லெஸ்ஸிங் – வாழ்க்கை, போராட்டம், இலக்கியம்!
சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்
கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் போக்லோர் சப்போர்ட் சென்டர்