முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஃபிரான்ஸ் காஃப்கா‌வி‌ன் “விசாரணை”
ஆர். முத்துக்குமார்
(புதினம்)

kafka
webdunia photoWD
ஆஸ்த்ரிய-ஹங்கேரிய எழுத்தாளரான ப்ரான்ஸ் காஃப்கா, யூத சமயத்தைச் சேர்ந்தவர். மொழியிலும் பண்பாட்டிலும் ஜெர்மானிய இலக்கியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது இந்த நாவலில் ஜோசஃப் கே என்ற ஒரே பாத்திரத்தின் போராட்டங்களே இந்த நாவலில் பிரதானமாக பேசப்படுகிறது. மற்ற பாத்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் பெயரற்றவர்கள் அல்லது முகமற்றவர்கள். மேலும் இந்த பாத்திரங்கள் பிரதான பாத்திரமான ஜோஸப் கே இன் மன ஓட்டங்களே.

ஜோசப் கே ஒரு முப்பது வயது பிரம்மச்சாரி, ஒரு வெற்றிகரமான வங்கி ஊழியர். இவருக்கென்று வாழ்க்கையில் பற்றுதல் எதுவுமில்லை. இந்த நாவல் எந்தக் குறிப்பிட்ட இடத்தையும் மையமாகக் கொண்டும் எழுதப்படவில்லை. மேலும் கதை நடைபெறும் நகரத்தைப்பற்றிய எந்த விதமான சிறப்பு குறிப்புகளும் இல்லை.

ஜோசப் கே ஒரு விடுதியில் தங்கியிருக்கிறான். அமைதியான உணவு விடுதியில் மட்டுமே அவன் உணவு உண்ணும் பழக்கமுள்ளவன். இரவு ஒன்பது மணி வரையில் வேலை செய்வான். இவனுக்கென்று நெருங்கிய நண்பர்கள் யாருமில்லை.

ஒரு நாள் காலை அவன் தனது வழக்கமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது திடீரென இரண்டு காவலர்கள் அவன் விடுதியில் நுழைந்து அவன் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவனுக்குத் தெரிந்திருந்தும், நீதிமன்றத்தின் பிடியில் இல்லை என்பதை உணர சற்று நேரம் பிடித்தது. எல்லாமே மர்மமாக இருந்தது, அவன் என்னக் குற்றம் செய்தான் என்பதும் அவனுக்குத் தெரியப்படுத்தவில்லை. இந்த வழக்கில் எந்த சட்டம் இதற்குப் பொருந்தும் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் அவன் அலுவலகத்திற்கும் பிற இடங்களுக்கும் செல்ல அனுமதிக்கப்பட்டான். ஆனால் இவனின் குற்றத்தை தெரிந்து கொண்டவர்கள் போல் நடந்து கொண்டனர் இவன் சந்தித்த மனிதர்கள்.

விசாரணை நடைமுறைகள் அழுக்கடைந்த இடங்களிலும் முடிவற்ற படிக்கட்டுகளைக் கொண்ட உயரே இருக்கும் இடங்களிலும் நடைபெறுகின்றன. எதிர்பாராத மனிதர்கள் நீதிமன்ற அதிகாரிகளாக மாறுகின்றனர். விசாரணை நடைமுறைகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் அழுத்தம் உள்ளதாகவும் உருமாறி நீதிமன்ற அதிகாரிகளுக்கே அங்கு என்ன நடைபெறுகிறது என்பது புரியவில்லை. கீழ்மட்ட அதிகாரிகள் ஊழல் நிரம்பியவர்களாக இருக்கின்றனர், அதிகாரம் படைத்த நீதிபதிகள் எங்கோ மூலையில் இருக்கின்றனர், அவர்கள் இருக்கிறார்களா என்பதே சிலருக்கு சந்தேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட மோசமாக வழக்குகள் தீர்க்கப்படாமல், பலர் விடுதலை செய்யப்படாத சூழலும் நிலவுகிறது.

தனது மேல் சுமத்தப்பட்ட குற்றம்தான் என்ன என்பதை ஜொசப் கே அறிய முயலுவதுவதாக கதைப்போக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருவர் மாற்றி ஒருவரை 'கே' வருடம் முழுவதும் கேட்டுப்பார்த்து தோல்வி அடைந்து விடுகிறான். முதலில் தனக்கு அருகில் குடியிருக்கும் ஃப்ராலின் பாஸ°ட்னர் என்ற தட்டச்சு ஊழியரிடம் தனக்கு நேர்ந்ததை விளக்குகிறான், ஆனால் அவள் இந்த விஷயத்தில் எந்தவித ஆர்வமும் காட்டாமலிருக்கிறாள்.

ஒரு ஞாயிறன்று அவன் விசாரணை நடைபெறுகிறது. அது மிகவும் கூச்சலும் குழப்பமுமான ஒரு நிகழ்வாக முடிவடைகிறது. அன்று கே தனக்காக வாதாடுகிறான், இதன் மூலம் நீதிமன்றத்தில் கூடியிருக்கும் பார்வையாளர்களின் கருணையைத் தான் பெற்றுவிட்டதாக அனுமானித்துக்கொள்கிறான. இதற்கு அடுத்த வாரம் அவன் மீண்டும் வருகிறான், ஆனால் நீதிமன்றம் ஆள் அரவமற்றுக் காட்சியளித்தது. அவன் சட்டப் புத்தகங்களை எடுத்துப்பார்க்கிறான் ஆனால் அதில் கீழ்த்தரமான சில வரைபடங்களே இருக்கின்றன. நீதிபதிகள் வாசிக்கும் சட்ட புத்தகங்களுக்குப் பதிலாக அபாச புத்தகங்களே அந்த ஆளற்ற அறையில் உள்ளதை ஜோசஃப் கே பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.

நாளடைவில் விசாரணை குறித்த அச்சம் ஏற்படத் துவங்குகிறது இதனால் அவனது வங்கி வேலைகளிள் இடர் ஏற்படுகிறது. ஜோசப்பின் மாமா கார்ல் ஒரு வக்கீலிடம் அவனை அழைத்துச் செல்கிறார். வக்கீலும் அவனது மாமாவும் இந்த வழக்கைப்பற்றி பேசிக்கொண்டிருக்கையில், நோயாளியான அவரது அறையிலிருந்து ஜோசஃப் வெளியேறி அவரது நர்ஸுடன் காதலில் ஈடுபடுகிறான். இதன் பிறகு அவனது மாமா ஜோசப்பை அவனது செய்க்கைக்காக எச்சரிக்கை செய்கிறார். ஜோசஃப் நீதிமன்றத்திற்கு ஒரு மனு போட விரும்புகிறான் ஆனால் வக்கீல் அது படிக்கப்படாமலேயே போய்விடும் என்று அதை நிராகரித்து விடுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பதே அங்கு கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

தன்னுடன் இருக்கும் ஒருவரின் ஆலோசனைப்படி கே டிதோரெல்லி என்ற நீதிமன்ற அதிகார பூர்வ வரைபடக்கலைஞனை அணுகுகிறான். அவன் வசிக்குமிடம் ரௌடிகளும் வேசியர்களும் வாழும் ஒரு கீழ்த்தரமான வசிப்பிடமாகும். அவனுக்கு நீதிமன்ற வளாகத்தில் நிறைய செல்வாக்கு இருக்கிறது. இந்த வழக்கு குறித்து அவன் ஜோசஃப்பிடம் ஒரு மூன்று சாத்தியங்களை முன்வைக்கிறான். ஒன்று...
1 | 2 | 3 | 4  >>  
மேலும்
பூனைகள் இல்லாத வீடு - புத்தக மதிப்பீடு
நாவலா‌சி‌ரிய‌ர் ‌நீல ப‌த்மனாபனு‌க்கு சா‌கி‌த்ய அகாதெ‌மி ‌விருது!
நீர்ப்பண்பாடு
டோரிஸ் லெஸ்ஸிங் – வாழ்க்கை, போராட்டம், இலக்கியம்!
சுந்தர ராமசாமி - ஓர் எதிர்ப்புக் குரல்
கிராமியக் கலை ஆய்விற்கும் உதவும் நேஷனல் போக்லோர் சப்போர்ட் சென்டர்