அதிகாலையில் மாரடைப்பு ஏன்?
பொதுவாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பாதிப்புகள் அதிகாலையிலேயே ஏற்படுகின்றன. அதிகாலையில் இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு, இரத்த நாளங்கள் அந்த நேரத்தில் செயல்பாடு குறைந்து காணப்படுவதே என்று வாஷிங்டனில் எமோரி மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எண்டோதீலியல் செல்களானது, இரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்குமான (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வருகின்றன.
இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு மற்றும் இரத்தத்தின் பயணத்தில் உறைவதையோ அல்லது அடைப்பதையோ (Blood clots) தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகின்றன.
இரத்தம் உறைதல் அல்லது அடைப்பதாலேயே மாரடைப்பும், வலிப்பும் ஏற்படுகின்றன.
எண்டோதீலியல் செல்களின் செயல்பாடு அதிகாலை நேரத்தில் குறைவதாலேயே மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வயதுடைய 12 பேரை சுமார் 24 மணி நேரம் ஆய்வுக்குட்படுத்தி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும், இரத்த நாளங்கள் (Blood vessel) ரிலாக்ஸ் ஆவது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தத்தை அறிந்து இரத்த நாளங்களின் செயல்பாடு பற்றி கண்டறியப்பட்டதாகவும், அதன்படி அதிகாலையில் மாரடைப்பு பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
எண்டோதீலியல் செல்களானது, இரத்தத்திற்கும், இருதய உறுப்புகளுக்குமான (ஆர்டிரிஸ்) ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வருகின்றன.
இரத்த சுத்திகரிப்பு கட்டுப்பாடு மற்றும் இரத்தத்தின் பயணத்தில் உறைவதையோ அல்லது அடைப்பதையோ (Blood clots) தடுப்பதிலும் ஆர்டிரிஸ் முக்கியப் பங்காற்றுகின்றன.
இரத்தம் உறைதல் அல்லது அடைப்பதாலேயே மாரடைப்பும், வலிப்பும் ஏற்படுகின்றன.
எண்டோதீலியல் செல்களின் செயல்பாடு அதிகாலை நேரத்தில் குறைவதாலேயே மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வயதுடைய 12 பேரை சுமார் 24 மணி நேரம் ஆய்வுக்குட்படுத்தி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும், இரத்த நாளங்கள் (Blood vessel) ரிலாக்ஸ் ஆவது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இரத்த அழுத்தத்தை அறிந்து இரத்த நாளங்களின் செயல்பாடு பற்றி கண்டறியப்பட்டதாகவும், அதன்படி அதிகாலையில் மாரடைப்பு பாதிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.
