மன அழுத்தம் அதிகரிக்க குடும்பச்சூழல் தான் காரணம்: ஆய்வு!
மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்ட்டிசால் ஹார்மோன்கள் சுரப்பு உடலில் அதிகரிக்க மரபணுக்களும், குடும்பச் சூழலும் முக்கிய காரணிகளாக உள்ளது என்று கண்டறியப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்கள் சுரப்புக்கு காரணிகள் எவை என்பது தொடர்பாக லாவல் பல்கலைக் கழகத்தின் குழந்தைகளியல் துறை பேராசிரியர் மைக்கேல் போவின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு 19 மாதங்களே நிறைவடைந்த 346 இரட்டையர்கள் எடுத்துக் ௦௦௦௦௦கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உற்பத்திக்கு மரபணுக்கள் 40 விழுக்காடுதான் காரணிகளாக அமைகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அழுத்தம் தொடர்பான இந்த கார்ட்டிசால் ஹார்மோன் உடலில் புதிய சூழ்நிலைகளில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுரக்கின்றன.
ஆரோக்கியமில்லாத அல்லது பிரச்சனைகள் நிறைந்த குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
மனிதர்களின் உடலில் கார்ட்டிசால் உற்பத்தி அதிகரித்து அழுத்தமான நிலை உருவாவதற்கு மரபணு, சுற்றுச்சூழல் ஆகியவை காரணிகளாக இருக்கலாம் என்று ஏற்கெனவே கருதியிருந்த நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர். 100 விழுக்காடு அளவுக்கு உயிரணுக்களை பகிர்ந்து கொண்ட 130 ஒத்த இரட்டைக் குழந்தைகள், 50 விழுக்காடு அளவுக்கு உயிர் அணுக்களை பகிர்ந்து கொண்ட 216 சகோதரத்துவ இரட்டையர்களையும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட குழந்தைகளை அவர்களின் தாயுடன் கோமாளி மற்றும் அதிக
சத்தத்துடன் இயங்கும் ரோபாட் ஆகியவை உள்ள ஒரு அறைக்குள் அழைத்து சென்றுள்ளனர். இந்த முறை குழந்தைகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் நடைமுறை அல்ல என்றும், ஆனால் அந்த வயதில் உள்ள குழந்தைகளின் பழக்கவழக்கத்தில் கணிசமாக மாற்றத்தை உருவாக்க வல்லவை என்று போவின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு குழந்தைகளை ஈடுபடுத்தும் முன்பும், பின்பும் அவர்களின் கார்ட்டிசால் அளவை ஆய்வாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டதுடன், அவற்றின் உதவியுடன் ஒவ்வொரு குழந்தையின் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கர்ப்பக் காலத்தின் போது புகையிலை பயன்படுத்தியது, மிகக் குறைந்த குடும்ப வருவாய், குறைந்த கல்வித் திறன், மிக இளம் வயதில் தாய்மையடைதல், எடைக் குறைந்து பிறக்கும் குழந்தைகள், கருவில் உள்ள குழந்தைக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பலகாரணிகள் கார்ட்டிசால் அளவு உயரக் காரணமாக உள்ளது.
இந்தக் காரணிகளில் குறைந்தது 4 காரணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நான்கில் ஒரு பங்கு குழந்தைகளை பாதித்துள்ளதாக போவின் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான பிரச்சனைகள் அற்ற குடும்ப சூழ்நிலைகளில் வாழும் குழந்தைகளுக்கு 40 விழுக்காடு அளவுக்குத்தான் கார்ட்டிசால் உற்பத்தியாவதற்கு மரபணுக்கள் காரணமாக உள்ளன என்பதும், மோசமான குடும்ப சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு மரபணுவின் தாக்கம் பூஜ்யமாகவும், சுற்றுச்சூழுலின் தாக்கம் அதிகமாகவும் காரணியாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
சிக்கலான குடும்ப சூழ்நிலைகளில் வாழும் இளம் வயது குழந்தைகள் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களின் பெற்றோரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு உறுதிப்படுத்துவதாக போவின் தெரிவித்துள்ளார்.கார்ட்டிசால் ஹார்மோன் உய்ர்வு அழுத்தத்தின் அடிப்படையில் உருவாவதுதான் என்றாலும், நீண்ட கால குழந்தைகளின் வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும் போது கார்ட்டிசால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவது எதிர்க்காலத்தில் பெரும் தீங்கை விளைவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோன்கள் சுரப்புக்கு காரணிகள் எவை என்பது தொடர்பாக லாவல் பல்கலைக் கழகத்தின் குழந்தைகளியல் துறை பேராசிரியர் மைக்கேல் போவின் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு 19 மாதங்களே நிறைவடைந்த 346 இரட்டையர்கள் எடுத்துக் ௦௦௦௦௦கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் உற்பத்திக்கு மரபணுக்கள் 40 விழுக்காடுதான் காரணிகளாக அமைகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அழுத்தம் தொடர்பான இந்த கார்ட்டிசால் ஹார்மோன் உடலில் புதிய சூழ்நிலைகளில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சுரக்கின்றன.
ஆரோக்கியமில்லாத அல்லது பிரச்சனைகள் நிறைந்த குடும்ப சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் உடலில் கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
மனிதர்களின் உடலில் கார்ட்டிசால் உற்பத்தி அதிகரித்து அழுத்தமான நிலை உருவாவதற்கு மரபணு, சுற்றுச்சூழல் ஆகியவை காரணிகளாக இருக்கலாம் என்று ஏற்கெனவே கருதியிருந்த நிலையில், அதன் உண்மை நிலையை கண்டறிய இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர். 100 விழுக்காடு அளவுக்கு உயிரணுக்களை பகிர்ந்து கொண்ட 130 ஒத்த இரட்டைக் குழந்தைகள், 50 விழுக்காடு அளவுக்கு உயிர் அணுக்களை பகிர்ந்து கொண்ட 216 சகோதரத்துவ இரட்டையர்களையும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட குழந்தைகளை அவர்களின் தாயுடன் கோமாளி மற்றும் அதிக
சத்தத்துடன் இயங்கும் ரோபாட் ஆகியவை உள்ள ஒரு அறைக்குள் அழைத்து சென்றுள்ளனர். இந்த முறை குழந்தைகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் நடைமுறை அல்ல என்றும், ஆனால் அந்த வயதில் உள்ள குழந்தைகளின் பழக்கவழக்கத்தில் கணிசமாக மாற்றத்தை உருவாக்க வல்லவை என்று போவின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு குழந்தைகளை ஈடுபடுத்தும் முன்பும், பின்பும் அவர்களின் கார்ட்டிசால் அளவை ஆய்வாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டதுடன், அவற்றின் உதவியுடன் ஒவ்வொரு குழந்தையின் குடும்ப சூழ்நிலைகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கர்ப்பக் காலத்தின் போது புகையிலை பயன்படுத்தியது, மிகக் குறைந்த குடும்ப வருவாய், குறைந்த கல்வித் திறன், மிக இளம் வயதில் தாய்மையடைதல், எடைக் குறைந்து பிறக்கும் குழந்தைகள், கருவில் உள்ள குழந்தைக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பலகாரணிகள் கார்ட்டிசால் அளவு உயரக் காரணமாக உள்ளது.
இந்தக் காரணிகளில் குறைந்தது 4 காரணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நான்கில் ஒரு பங்கு குழந்தைகளை பாதித்துள்ளதாக போவின் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான பிரச்சனைகள் அற்ற குடும்ப சூழ்நிலைகளில் வாழும் குழந்தைகளுக்கு 40 விழுக்காடு அளவுக்குத்தான் கார்ட்டிசால் உற்பத்தியாவதற்கு மரபணுக்கள் காரணமாக உள்ளன என்பதும், மோசமான குடும்ப சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு மரபணுவின் தாக்கம் பூஜ்யமாகவும், சுற்றுச்சூழுலின் தாக்கம் அதிகமாகவும் காரணியாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.
சிக்கலான குடும்ப சூழ்நிலைகளில் வாழும் இளம் வயது குழந்தைகள் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களின் பெற்றோரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு உறுதிப்படுத்துவதாக போவின் தெரிவித்துள்ளார்.கார்ட்டிசால் ஹார்மோன் உய்ர்வு அழுத்தத்தின் அடிப்படையில் உருவாவதுதான் என்றாலும், நீண்ட கால குழந்தைகளின் வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும் போது கார்ட்டிசால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவது எதிர்க்காலத்தில் பெரும் தீங்கை விளைவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
