1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (09:53 IST)

உலகக் கோப்பை: வலை பயிற்சியில் வருங்கால கேப்டன் கோலி கடும் கொந்தளிப்பு

இந்திய வீரர்கள் பெர்த் நகரில் நடைபெற்ற வலை பயிற்சியல் பங்கேற்ற போது, அங்கிருந்த ஒரு நிருபரை கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வருகிற மார்ச், 6 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான வலை பயிற்சியை இந்திய வீரர்கள்  பெர்த்தில் நேற்று மேற்கொண்டனர். பயிற்சி முடிந்து அனைத்து வீரர்களும் விடைபெறும் போது துணை கேப்டன் கோலியோ திடீரென பொங்கி எழுந்து, அங்கிருந்த நிருபரை கடுமையாக திட்டினார். 
கோலி ஏன் இப்படி செயல்பட்டார் என்று தெரியாமல் அந்த நிருபர் செய்வதறியாமல் பதறிக்கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஊடகங்களில் கோலி மற்றும் அவரது காதலி குறித்து வெளிவந்த செய்திகளுக்கு அங்கிருந்த நிருபர் தான் மூலக்காரணம் என நினைத்து கோலி கொந்தளித்துள்ளார். 
 
பின்னர் இதுகுறித்து விசாரித்தபோது, அந்த நிருபருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தெரிந்தது. உடனே இதை அறிந்த கோலி பொது இடத்தில் இப்படி செயல்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். அவ்வப்போது சில இடங்களில் கோலியின் கொந்தளிப்பு அரங்கேறுவதால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.