ஒருவர் மீது ஒருவர் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கட்டி அணைத்தலால் இருவரும் இதயமும் இணைந்து இனம்புரியாத அன்பு வெளிப்படும் என்பது காலகாலமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்தால் சுரக்கும் ஹார்மோன்கள், இருவரையும் நீண்ட நேரத்திற்கு உற்சாகமாக வைத்துக் கொள்ளும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட உண்மை. தமிழகத்தில் கமல்ஹாசனின் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ் மூலம் அறிமுகமான இந்த கட்டிப்பிடி வைத்தியம் இன்னும் பிரபலமாக இன்றைய தினம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது
