வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (14:22 IST)

நிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா

செவ்வாய் கிரகம் புழுதி புயலால் நிறம் மாறி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

 
நாசா, செவ்வாய் கிரகரத்தில் புழுதி புயல் வீசும் என்றும், அமெரிக்க கணடத்தை விட விசாலமான பரப்பில் புயல் வீசும் என்றும் என்று தெரிவித்து இருந்தது.
 
அதன்படி புழுதி வீசுவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது. இதனால் கிரகத்தில் பல இடங்கள் நிறம் மாறி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்துள்ளது. 
 
அந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது. சாதாரண நாட்களின் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், புழுதி புயலின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா பாதிப்புகளை சுட்டி காட்டியுள்ளது. மேலும், புழுதி புயல் காரணமாக பல இடங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.