வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (12:38 IST)

பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை மீட்பு

சீனாவில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. குழந்தைகள் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கும் லூட்டி சில சமயம் பெற்றோர்களை தர்ம சங்கட சூழ்நிலையிக்கு ஆளாக்கிவிடுகிறது.
 
சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட இரண்டு வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது. 
 
சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை உணர்ந்த பெற்றோர், குழந்தையை வீடு முழுவதும் தேடினர். அப்போது வாசிங் மெஷினில் இருந்து அழுகுரல் கேட்டது. பதற்றமடைந்து வாஷிங் மெஷினுள் பார்த்த போது குழந்தை வாஷிங் மெஷினுள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து குழந்தையை வாஷிங் மெஷினில் இருந்து எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
 
இதனையடுத்து போலீஸாரின் உதவியோடு பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.