செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (08:23 IST)

ஆசியாவின் மிகப்பெரிய மரக்கட்டிடம் சாம்பலானது. அதிர்ச்சி தகவல்

சீனாவில் உள்ள லுங்குவான் என்ற மரத்தால் ஆன அழகிய 16 மாடி கட்டிடம் தீவிபத்தால் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாகியுள்ளது அந்த பகுதியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று காலை கீழ்த்தளத்தில் பற்ற தொடங்கிய நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவி கட்டிடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த விபத்துக்கான இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை செய்து வருவதாகவும் சீன தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். நேற்றுவரை கம்பீரமாக பொன்னிறத்தில் ஜொலித்த கட்டிடம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதால் அந்த பகுதியினர் சோகமே உருவான நிலையில் உள்ளனர்.