வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 செப்டம்பர் 2018 (11:57 IST)

சீனாவில் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 9 பேர் பலி

சீனாவில் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதியில் கார் புகுந்ததால் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
சீன நாட்டிலுள்ள ஹூனான் மாகாணத்தில் வேகமாக வந்த ஒரு கார் மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் புகுந்தது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் பலத்த காயம் அடைந்தனர்.
 
இந்த விபத்து நிகழ காரணமான வாகன ஓட்டுனர் யாங் ஜான்யுன் என்பவரை பிடித்து விசாரிக்கையில் அவன் பவிதமான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற குற்றவாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவனிடம் போலீசார் விபத்து குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.