1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 மார்ச் 2018 (11:00 IST)

50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

பிலிப்பைன்ஸ்சில் 50 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டோரோ மாகாணம் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஒரு குருகலான வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்புகளில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் பலிகியுள்ளனர். மேலும் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.