1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:47 IST)

அதிர்ச்சி தகவல்: 40 ஆண்களால் பலமுறை கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

அதிர்ச்சி தகவல்: 40 ஆண்களால் பலமுறை கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் 14 வயது சிறுமி ஒருவர் 40 ஆண்களால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


 
 
தாய்லாந்தின் பாங் நெகா மாகாணத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் பெற்றோர்கள் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரை பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே காவல்துறைக்கு அளித்துள்ளார்.
 
இந்நிலையில் அந்த சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலத்தில், அவர்கள் கூலித்தொழில் செய்து வருவதால் இரவு நேரத்தில் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அப்போது அவரது வீடு புகுந்து ஒரு நபர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
 
அதே நபர் ஒன்னொரு நாள் வந்து சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். மூன்றாவது முறையாக தனது நண்பர்களை அழைத்து வந்து சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். ஆனால் இந்த விவகாரம் குறித்து அந்த சிறுமி பெற்றோர்களிடம் கூறவில்லையாம்.
 
அந்த நபராலும் அவரது நண்பர்களாலும் தனது குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் சிறுமி அதனை மறைத்துள்ளார். இந்த கூட்டு பலாத்காரத்துக்கு பின்னர் சிறுமியை இரவு நேரத்தில் கடத்தி சென்று போதை மருந்து கொடுத்து கூட்டாக பலமுறை பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல்.
 
சிறுமியின் மீதான இந்த பாலியல் தாக்குதலில் 40 ஆண்கள் ஈடுபட்டிருப்பதாக சிறுமியின் தாய் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த பாலியல் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது ஊடகங்களில் வெளியாக இது தொடர்பாக விசாரணை நடத்த அந்த மாநில போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார் மாகாண ஆளுநர்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்யுமாறும் தனிக்குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்துமாறும் ஆளுநர் கூறியுள்ளார்.