வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 24 ஜூலை 2019 (19:09 IST)

சீனாவில் பயங்கர நிலச்சரிவு… மீட்பு குழுவினர் தீவிரம்

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூயஸ்ஹோ மாகாணம். இந்த மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமம் ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போனவர்களை, மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.