வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (13:53 IST)

துலாம் ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

சமம் தராசு என்பதற்கேற்ப அனைத்து விதமான மக்களையும் ஒரே நியாயத் தராசில் வைத்துப் பார்க்கும் துலாம் ராசி அன்பர்களே,




இந்த மாதம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாடகளாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடியும் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். எதிலும் சற்று கவனம் தேவை.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். எனினும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதார வளம் சிறப்படையும். வழக்கு அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சனை முடியும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் கௌரவம் உயரும். முயற்சிகளில் பின் தங்கிய நிலை வேண்டாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்போடு குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள்.தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள், ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கௌரவம் உயரும். சிலர் தொழில் நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

பெண்கள் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அக்கம் பக்கத்தினரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து அவர்கள் இல்ல விசேஷங்களுக்கு உங்களை முன் நிறுத்துவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள்.கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவீர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைத்துறையில் சீரான நிலைமை இருக்கும். நல்லவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சுலபமான விசயங்கள் அனைத்தும் சிறிது முயற்சிக்குப் பின்னரே கிட்டும். முகத்திற்கு முன் விமர்சிப்பவர்கள் உங்களை பின்னால் பாராடுவார்கள்.
அரசியல்வாதிகள் சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். கௌரவம் உயரும். அதிக பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பகுதி மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் முன்னேற்றப் பாதையில் இருந்து வந்த தடைகளை உடனிருப்போர் அதிக அக்கறையுடன் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவர்.

மாணவர்கள் மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துப்படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். ஆசிரியர்கள் உங்களை சிறந்த மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் போது உங்களுக்கு மனநிறைவு உண்டாகும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பரிகாரம்:வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி