1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (17:08 IST)

பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததும் உரிமை குரல் எழுப்பிய ஜூலி; பதட்டத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் - ப்ரொமோ

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  கமலுடன் கலந்துரையாடினார்கள். பிக்பாஸ் வீட்டில் போக விருப்பம் தெரிவித்த ஆர்த்தி,  நாங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டில் யாரெல்லாமோ கிரகப் பிரவேஷம் செய்கிறார்கள். கயிறு வழியாக, சுவர் வழியாக சிலர் போகும்போது நான் ஏன் மீண்டும்  செல்லக் கூடாது என்று கூறினார்.

 
இதனையடுத்து தற்போது ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக எண்ட்ரி கொடுத்த நிலையில், தற்போது இருக்கும் புதிய ஹவுஸ்மேட்ஸ் மற்றும் பழைய ஹவுஸ்மேட்ஸ் ஆகியோர் இவர்களை வரவேற்றனர்.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் ஜூலி காஜலிடம், நான் முதல்ல பார்த்தப்ப எல்லாரும் ஸ்டார், ஆனால்,  இந்த வீட்ல அவங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எல்லாருக்கும் இருக்கு. தொடர்ந்து பேசிய ஜூலி இந்த  வீட்ல எல்லாரும் பாசத்த காண்பித்து என்ன ஏமாத்திட்டாங்க. இதுக்கு மேல அண்ணனா இருந்தாலும் நின்னு கேட்பேன் என்று கூறுகிறார்.

வந்துட்டாங்கையா! வந்துட்டாங்கையா! இனிமே பாருங்க எப்படி ஆகபோகுதுன்னு மட்டும்.
 
ஏற்கனவே ஒரு முறை சிநேகன் ஒரு ஜூலியே எங்களால் சமாளிக்க முடியல எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.