1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (10:47 IST)

அந்த படங்களை பார்க்க உரிமை இருக்கு: உச்சநீதிமன்றத்தில் திலீப் வழக்கு

கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.  நீண்ட நாளுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் .
இந்நிலையில் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். நடிகையை துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள்  செல்போன் மெமரி கார்டில்  உள்ளதாக என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “ நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். நடிகையை துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள்  செல்போன் மெமரி கார்டில்  உள்ளதாக என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
அந்த படங்களை பார்க்க எனக்கு உரிமை உள்ளது. என்னை வழக்கில் சிக்க வைக்க இதுபோன்ற படங்களை உருவாக்கி இருப்பதாக கருதுகிறேன். எனவே அந்த புகைப்படங்களை எனக்கு காட்டும்படி உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்..
 
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.