வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (15:11 IST)

நயன்தாராவை தொடர்ந்து டாப்ஸி: திரில்லர் இயக்குனரின் ‘கேம் ஓவர்'

நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன், டாப்ஸியை வைத்து 'கேம் ஓவர்’  என்ற திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குகிறார்.

‘தமிழ்ப்படம்’, ‘காவியத் தலைவன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’  ‘விக்ரம் வேதா’  உள்ளிட்ட படங்களை தயாரித்த உள்ளிட்ட ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் 'கேம் ஓவர்’  படத்தை தயாரிக்கிறார். சஷிகாந்துடன் இணைந்து ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ரோன் எத்தன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின்
ஷூட்டிங் இன்று முதல் தொடங்கவுள்ளது.  'கேம் ஓவர்’  படத்தின்  பர்ஸ்ட் லுக்குடன் நேற்று மாலை வெளியாகியது.

படம் குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணன் கூறுகையில், ``ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகித காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகிறது. இந்தியிலும் எடுக்க பேசிவருகிறோம்" என்றார்.