1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (17:58 IST)

கதறிய பாட்டிக்கு சூரி கொடுத்த இன்ப அதிர்ச்சி

கஜா புயல் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.




இங்கு வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் நேரில் தேடிச்சென்று உதவி செய்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் சூரியும் தன்னால் இயன்ற உதவிகளை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார்.

அண்மையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நடிகர் சூரி டெல்டா மாவட்டங்களுக்கு சென்றார். அப்போது ஒரு பாட்டி செல்போன் புயலால் தொலைந்து போய்விட்டது என்றும் அதனால் தன்னுடைய பேரனிடம் பேச முடியவில்லை என்றும் சூரியிடம் கதறி அழுதார்.



இதைக் கேட்டு விட்டு ஊருக்கு சென்ற சூரி அந்த பாட்டிக்கு, கொஞ்சம் பணமும் புதிய செல்போனும்  அனுப்பிவைத்துள்ளார்.  இந்த செயலால் அந்த பாட்டி மட்டுமல்ல அந்த ஊர் மக்களும் சூரியை வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.