1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (12:57 IST)

லாரன்ஸை பாத்து கத்துக்குங்க பா: உருகும் ஸ்ரீரெட்டி

ராகவா லாரன்ஸை பார்த்து அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
 
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
 
















இந்நிலையில் ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கஜா புயலால் பாதிப்படைந்து பிளாட்பாரத்தில் தங்கியிருக்கிறார்கள். லாரன்ஸ் மாஸ்டர் கேரளாவில் புயல் ஏற்பட்டபோது பெருமளவு உதவி செய்தார். அவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவரைப் போல கஜாவால் பாதித்த மக்களுக்கு உதவுங்கள் என கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு உதவிய சூர்யாவின் குடும்பத்திற்கு நன்றி என கூறினார். தன்னால் முடிந்த உதவியையும் செய்வதாக அவர் கூறியுள்ளார்.