1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (12:35 IST)

வெளிநாட்டில் விபச்சாரம் செய்யும் தமிழ் நடிகைகள் : ஸ்ரீரெட்டி பகீர் தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

 
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் “சமீபத்தில் அமெரிக்க காவல்துறையினர் சிகாகோவை சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் அங்கு பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 
பல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க போலீசாருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” என அவர் தெரிவித்தார். 
 
மேலும், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தனது  முகநூல் பக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், தங்களின் வாயை திறந்தால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள் என ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.