வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:50 IST)

பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பாடும் நிலா... பொதுமக்கள் அஞ்சலி!

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. 

 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அவர் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி உடலின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இவற்றை காண்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது.