1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (21:20 IST)

இனி 3 அல்லது 4 தான்: சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!!

சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


 
 
இந்த படத்தை மோஅன் ராஜா இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா நாயகியாகவும் மலையாள நடிகர் பஹத் ஃபாசில் வில்லானகவும் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு முடிவை எடுத்துள்ளார். இனி வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸாகி ஒரு வருடமாவதால் அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். எனவே, எப்படியேனும் வருடத்திற்கு 3 - 4 படங்களில் நடிக்க உள்ளாராம். 
 
இந்த முடிவை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளாராம். மேலும், வேலைக்காரன் படம் மிக விரைவில் ரிலீஸாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.