1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 மார்ச் 2017 (11:46 IST)

தனுஷ் என்னை தாக்கவில்லை - பாடகி சுசித்ரா விளக்கம்

தனுஷ் என்னை தாக்கவில்லை, எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என பாடகி சுசித்ரா புது விளக்கமளித்துள்ளார்.  



 

பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டார்.

இதற்கு சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் விளக்கமளித்திருந்தார். சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதால் அவர்களிடம்  மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

 இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், புரளிகளுக்கு விளக்கம் அளிக்கிறேன். தனுஷ் என்னை தாக்கவில்லை. அது ஒரு விளையாட்டு. சற்று கட்டுப்பாடு மீறிச் சென்றது. எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

சுசித்ராவின் கணவர் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்கிறhர், இவர் சும்மா விளையாட்டு என்கிறார்.

எங்கேயோ தீய்ஞ்ச வாசனை வருதே...