வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (10:45 IST)

போதையில் சுய நினைவில்லாமல் தனுஸ்ரீத்தா இருந்தார்: ராக்கி சாவந்த்

நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது  பாலியல் புகார் தெரிவித்தார் தனுஸ்ரீத்தா, தற்போது பிரபல டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி தனுஸ்ரீத்தா கூறும்போது, “சாக்லேட் படத்தின் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.

எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். நான் அதிர்ச்சியானேன். இதைக் கேட்டு இர்பான்கானும் அதிர்ச்சியானார்" என்றார்.

இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவின் புகாரை மறுத்துள்ள நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-
தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானாபடேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா 4 மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.