1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (16:23 IST)

மூன்றாவது வாரத்தைக் கடந்தும் கல்லா கட்டும் ‘மெர்சல்’

ரிலீஸாகி மூன்று வாரங்கள் ஆனபிறகும் கூட கல்லா கட்டி வருகிறது ‘மெர்சல்’.




விஜய் நடிப்பில், கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸானது ‘மெர்சல்’. படம் ரிலீஸாகி, நேற்றோடு நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், இன்னும் வசூல் குறையவில்லை என்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸானதாகக் கூறப்பட்ட ‘மெர்சல்’, தற்போதுவரை 300 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் வெளியான படங்களில், ‘பாகுபலி 2’க்குப் பிறகு அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி கல்லா கட்டிக் கொண்டிருக்கும் படம் இதுதான் என்கிறார்கள்.