1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:57 IST)

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது – கார்த்திக் சுப்பராஜ் ஆவேசம் !

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இதற்கெதிராக போராட்டம் நடந்துவருகிறது. இதனை போலிஸ் அராஜகமான முறையில் ஒடுக்கி வருகிறது.

இதுகுறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இந்தியாவை மதச்சாற்ற நாடாக நீடிக்க வைப்போம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம். அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு 'நோ' சொல்வோம். இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது’ என போராடும் மக்களுக்கு ஆதரவாக் டிவிட் செய்துள்ளார்.