ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (20:12 IST)

இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு- சூர்யா

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சூரி அதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்று வெளியானது.

இந்நிலையில் அரசியல், திரை பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் படத்தை பார்த்து வியந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கடந்த 4 ஆம் தேதி தனது டுவிட்டர் நடிகர் சூரி “இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்சம் படம் பார்த்துவிட்டு மீதியை அடுத்த நாள் பார்க்கலாம் என நினைத்துதான் பார்க்க தொடங்கினேன். படம் முடிஞ்சும் எந்திரிக்க முடியலை. அப்படியே உறைந்து போனேன். ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை” எனக் கூறியிருந்தார்.

இதற்கு இன்று ரீடுவிட் செய்துள்ள சூர்யா தனது பதிவில், இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு எனத் தெரிவித்துள்ளார்.