மன்னிப்பு கேட்ட த்ரிஷா
தமிழ்ப் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், வயிறு சரியில்லை, பிளைட் லேட் என்று ஏதாவது காரணம் சொன்னால் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அஞ்சான் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஆப்சென்டான சமந்தா அப்படிதான் ஒரு கதை சொன்னார்.
தெலுங்கு, கன்னடத்தில் இந்த அழுகுணி ஆட்டம் செல்லுபடியாகாது. ரெட் கார்டே போட்டுவிடுவார்கள். அனாமிகா படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாததால் நயன்தாராவை அதன் பிறகு எந்த தெலுங்குப் படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை.
த்ரிஷா நடித்துள்ள முதல் கன்னட படம் பவர். இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அவ்வளவுதான். நாலா திசைகளிலிருந்தும் நெருக்கடி. பிறகு வேறு வழியில்லாமல் பெங்களூருவில் வைத்தே பத்திரிகையாளர்கள் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அத்துடன், பெங்களூரு எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. பவர் படத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சியானது என்று இரண்டு பிட்டையும் போட்டுள்ளார்.