1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (15:27 IST)

ரூ. 200 கோடி வசூலைக் கடந்த ‘மெர்சல்’

தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படம், 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.


 


விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கிய இந்தப் படம், தீபாவளி தினத்தன்று ரிலீஸானது. நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில், எந்தப் படமும் செய்யாத சாதனையை ‘மெர்சல்’ படம் செய்திருக்கிறது என்கிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படம்தான் அதிகம் வசூலித்து முதலிடத்தில் உள்ள தமிழ்ப் படம். 280 கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலானதுதான் இந்தத் தொகை.

ஆனால், படம் வெளியான 12 நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது ‘மெர்சல்’. நேற்றுவரை உலகம் முழுவதும் இந்தத் தொகையை வசூலித்துள்ளது. இப்படியே போனால் ‘எந்திரன்’ சாதனையை முறியடித்துவிடும் என்கிறார்கள்.