ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:29 IST)

முதலில் குழந்தை, பிறகுதான் திருமணம்: பிரபல நடிகை ஓப்பன் டாக்!!!

குழந்தை பெற்ற பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என நடிகை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் பலர் ஒப்பனாக பேடுவதாக நினைத்துக் கொண்டு சில சமயங்களில் அருவருப்பாக பேசி சிக்கலில் சிக்குவர். சிலர் அருவருப்பான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்புவர்.
அந்த வரிசையில் ஆந்திராவை சேர்ந்த  நடிகை ரேஷ்மியிடம் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என கேள்வி கேட்டார்.
 
இதற்கு பதிலளித்த அவர் முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார். இதனைக்கேட்ட ரசிகர் எதுவும் ரிப்ளை செய்யமுடியாமல் வாயடைத்துப் போனார். இவரின் கருத்திற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரேஷ்மி சுதீர் என்பவரை காதலித்து வருகிறார்.