செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (22:33 IST)

விலகிய பிறகும் ஆக்டிவாக உள்ளது; ஃபேஸ்புக் மீது பிரபல நடிகர் புகார்

முகநூல் கணக்கை டெலிட் செய்த பிறகும் ஆக்டிவாக உள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் ஃபேஸ்புக் மீது புகார் தெரிவித்துள்ளார்.

 
கடந்த வாரம் ஃபேஸ்புக் முறைகேடு விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 
முகநூல் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்த பிறகும் அது தொடர்ந்து ஆக்டிவாக உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கு அவரது அனுமதியில்லாமல் தகவல் ஆய்வு நிறுவனம் கேம்பிரிஜ் அனெட்டிலா நிறுவனம் திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கோரினார்.