1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (13:12 IST)

அதை கேக்குறதுகு துப்பிள்ள... வடிவேலு பற்றி ட்விட்டிய சமுத்திரகனிக்கு திட்டு!

நடிகர் வடிவேலு பற்றி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி போட்ட டிவிட்டர் பதிவிற்கு அவரை பலர் திட்டி வருகின்றனர். 
 
காமெடி நடிகர் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டானதும் அவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் 24 ஆம் புலிகேசி படத்தை பற்றியும், ஷங்கர் மற்றும் சிம்புதேவன் பற்றியும் பேசியிருந்தார். 
 
இந்நிலையில் இதை கண்ட சமுத்தித்திரகனி, அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது. சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்! என பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் சிலர் சமுத்திரகனிக்கு ஆதரவாக பேசியிருந்தாலும் பலர் அவரை திட்டியுள்ளனர். அதில் ஒரு சில கமெண்டுக்கள் பின்வருமாறு... 
 
ஏன்டா ஒரு மனுசன் என்ன நடிக்க விடாமல் அரசியல் பணரங்கனு சொல்றறு அதை கேக்குறது துப்பிள்ள...
 
தலைவன் வடிவேலே இயக்கும் படைப்பாளி தான்யா... வர வர நீங்க ஏன் இப்படி முட்டு கொடுக்க ஆரம்பிச்சுட்டிங்க... உங்கமேல உள்ள மரியதையே போச்சேயா,.. 
 
வடிவேல் பேசுனது கரெக்ட் தான் நீ பேசுனது தான் தப்பு...
 
அப்போ ஏன் ராஜா மத்த படம்மெல்லாம் ஓடல. மக்களுக்கு தெரியும். நடிக்கவிடாம அரசியல் பன்றாங்கன்னு. அத கேளுங்க பாப்போம்...
 
எங்கள் அண்ணன் வடிவேலு, யாரையும் காரணம் இல்லாம தவறாக கூற மாட்டார்...சிரிக்க வைப்பவருக்கு நல்ல சிந்தனை... உருவாக்குபவர்க்கு இல்ல..
 
4 ஆண்டுகள் எந்தப் படமும் நடிக்காம இருங்க அப்ப நீங்க எவ்லோ நாகரிகத்தோட பேசுறீங்கனு பாக்கலாம்