1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (14:19 IST)

நட்பைப் புதுப்பித்த தனுஷ் – சிவகார்த்திகேயன்?

நேற்று நடந்த போராட்டத்தில் தனுஷும், சிவகார்த்திகேயனும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

 
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக நேற்று சினிமாத்துறையினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், ரஜினியின் அருகில் சிவகார்த்திகேயன் அமர்ந்திருந்தார். தாமதமாக வந்த தனுஷைப் பிடித்து இழுத்து ரஜினியின் அருகில் நிற்க வைத்தார். பிறகு, ரஜினியின் அருகிலேயே தனுஷை அமரவும் வைத்தார் சிவகார்த்திகேயன்.
 
அதற்கு முன்பே இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் எதிரிகள், சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் மூலம் இருவரும் நட்பைப் புதுப்பித்துக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.