1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (11:59 IST)

தனுஷை படமாக்கியதில் பெருமகிழ்ச்சி - வதந்திகளின் வாயை அடைத்த ஐஸ்வர்யா

தனுஷ் ஒருபக்கம் பிஸியாக நடிப்பதுடன் படங்களை தயாரித்து வருகிறார். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா படம் இயக்குவதில் பிஸி. இவர்கள் இடையே கருத்து வேறுபாடு, இருவருக்கும் சண்டை என்று மாதத்துக்கு ஒருமுறை வதந்தி கிளம்பிக் கொண்டேயிருந்தது. அதன் வாயை நிரந்தரமாக அடைத்துள்ளார் ஐஸ்வர்யா.
 
வை ராஜா வை பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா தனக்கும் தனுஷுக்குமான அந்நியோன்யத்தை கோடிட்டு காட்டினார்.
 
நானும் தனுஷும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீட்டில் பேசிக்கொள்வது சிறிது நேரம் தான். ஆனால், தனுஷுக்கு என்னுடைய படத்தின் கதை தெரியும். அவர் என்னுடைய சீனியர் மற்றும் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கிறார். மேலும் நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார். அவர் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதை படமாக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.