வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (18:10 IST)

ஆர்.கே.நகர் விவாகரத்தில் விஷாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆனையம் மக்கள் முன் வெளியிட வேண்டும் என இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால் தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதுகுறித்த ஆடியோவை வெளியிட்டார்.
 
விஷால் ஆர்.கே.நகர் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டபோது இயக்குநர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சேரன் தனது போரட்டத்தை வாபஸ் பெற்றார்.
 
இந்நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.