1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (17:32 IST)

என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை… பாடகி தீ விளக்கம்!!

அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன் என பாடகி தீ தெரிவித்துள்ளார்.


பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ அவரே இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது.

வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பாடலின் தொடக்க விழாவில் இந்த பாடல் பாடப்பட்டது. ஆனால் அதில் அறிவு கலந்துகொள்ளவில்லை.

பாடகி தீ கலந்துகொண்ட நிலையில் அறிவின் வரிகளை மாரியம்மாள் பாடினார். அப்போதே இதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பின. பலரும் அறிவு ஏன் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். இதைத் தொடர்ந்து 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்காக தான் எடுத்த முயற்சிகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அறிவு.

இந்நிலையில் இது குறித்து பாடகி தீ குறிப்பிட்டுள்ளதாவது, எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன்.

அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'என்ஜாய் எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.