1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 18 ஜூலை 2019 (13:56 IST)

உடலுறவு இல்லாமல் 100 நாள்... முடியுமா? பிக் பாஸ் நிர்வாகம் மீது காயத்ரி திடீர் குற்றச்சாட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பும் டிவி சேனல் நிர்வாகம் மீது தெலுங்கு நடிகை காயத்ரி குப்தா புகார் அளித்துள்ளார். 
 
தமிழ் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி 25 நாட்கள் ஆகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. 
 
தெலுங்கில் நிகழ்ச்சியை துவங்க போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்குவார், ஸ்டார் மா சேனனில் இது ஒளிப்பரப்பாகும்.
இந்நிலையில் தெலுங்கு நடிகை காயத்ரி குப்தா ஸ்டார் மா - பிக் பாஸ் நிர்வாகிகள் மீது புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த புகாரில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுல்லதா என கேட்டு சேனல் நிர்வாகிகள் என்னை அனுகினார்கள். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வந்த பட வாய்ப்புகளையும் நிராகரித்தேன். ஆனால், இப்போது சேனலில் இருந்து நீங்கள் போட்டியாளாராக பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. 
ஆனால் நிர்வாக தரப்பினர் ஒப்பந்தம் போடும் போது 100 நாட்கள் பாலியல் உறவுக்கொள்ளாமல் இருக்க முடியுமா என்ரெல்லாம் அநாகரிமாக கேள்வி கேட்டார்கள் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் நிர்வாகிகள் மீது பத்திரிக்கையாளர் ஸ்வேதா என்பரும் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.