1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (15:43 IST)

மீண்டும் நடிக்கவந்த ஜெயசித்ரா

பழைய நடிகையான ஜெயசித்ரா, சிறிய இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வந்துள்ளார்.

 
 
‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அரங்கேற்றம்’, ‘பட்டாம்பூச்சி’, ‘பட்டிக்காட்டு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஏகப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தன் மகன் அம்ரிஷ் கணேஷை வைத்து ‘நானே  என்னுள் இல்லை’ என்ற படத்தை இயக்கி, தயாரித்தார். ஆனால், அந்தப் படம் போகவில்லை.
 
7 வருடங்கள் கழித்து மறுபடியும் நடிக்க வந்திருக்கிறார் ஜெயசித்ரா. சந்திரமெளலி இயக்கும் ‘100% காதல்’ படத்தில் அவர்  நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும்  நடிக்கின்றனர். ஜெயசித்ரா, இந்தப் படத்தில் பாட்டியாக நடிக்கிறார்.