1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வியாழன், 26 ஜூன் 2014 (12:00 IST)

நயன்தாரா இது நியாயம்தானா...?

தான் நடிக்கும் படங்களின் பாடல் வெளியீட்டுவிழா உள்பட எந்த புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நயன்தாரா கலந்து கொள்வதில்லை. அதனை ஒரு பாலிசியாகவே அவர் வைத்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த தெலுங்குப் படம் அனாமிகா (தமிழில் நீ எங்கே என் அன்பே) வெளியானது. நயன்தாராதான் அந்தப் படத்தின் நாயகன், நாயகி எல்லாம். இருந்தும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு தடை போடும் அளவுக்கு இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்தது.
 
இவ்வளவு சர்ச்சைகளுக்குப் பிறகும் தனது கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார் நயன்தாரா. படத்தில் ஒப்பந்தமாகும் போதே விளம்பர நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன், கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தவோ, புகார் செய்யவோ கூடாது என எழுதித் தந்துதான் கால்ஷீட்டே தருகிறார்.
 
தான் நடித்தப் படங்களின் விழாக்களை புறக்கணிப்பவர் அமரகாவியம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதுடன் பாடல்கள் அடங்கிய முதல் சிடியை வெளியிடவும் செய்கிறார்.
 
சொந்த வீட்டில் துடைப்பம் எடுக்க மறுப்பவர் பக்கத்து வீட்டுக்கு வெள்ளையடிக்க உற்சாகம் காட்டுவதன் ரகசியம் என்ன?
 
ரகசியம் எதுவுமில்லை. அமரகாவியம் படத்தை தயாரித்திருப்பது நயன்தாராவின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா. நடித்திருப்பது ஆர்யாவின் தம்பி சத்யா. நயன்தாரா தனது பாலிசியை அமரகாவியம் விஷயத்தில் காற்றில் பறக்கவிட்டதற்கு ஆர்யாவின் நட்புதான் காரணம்.
 
பாலிசிக்காக நட்பைவிட முடியாதே.