வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:19 IST)

கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த உத்தப்பா

இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணியின் வீரர் ராபின் உத்தப்பா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - டெல்லி ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியுள்ளது. 
 
தொடக்க வீரர் சுனில் நரேன் 1 ரன்களுடன் இரண்டாவது ஓவரிலே வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ரன்கள் குவித்து கொல்கத்தா அணி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் 19 பந்துகளில் 3 சிக்ஸருடன் 35 குவித்தார்.
 
15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.