வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (17:57 IST)

டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா எதற்கு? கோலி பதில்...

இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? அதுவும் ரஹானேயை நீக்கி விட்டு ஏன் ரோகித்தை சேர்க்க வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு கேப்டன் கோலி பதிலளித்துள்ளார். கோலி கூறியதாவது, ரோஹித் சர்மா இந்த டெஸ்ட்டுக்கு முந்தைய 3 போட்டிகளில் ரன்கள் எடுத்தார். மேலும் நன்றாக விளையாடினார். 
 
கிரிக்கெட் வீரரின் நடப்பு ஃபார்மை வைத்தே அணிச்சேர்க்கை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில்தான் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் பேட்டிங் சொதப்பலால்தான் தோல்வி அடைந்தோம். 
 
பிட்ச் உண்மையில் அருமையாக இருந்தது. உண்மையில் எனக்கு இந்தப் பிட்ச் பிடித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அருமையான பிட்ச். இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதை பெருமையாக கருதுகிறேன். தொடருக்கு இந்த டெஸ்ட் அருமையான தொடக்கம் இது. ஆனாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெருவோம் என தெரிவித்துள்ளார்.