1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2023 (22:33 IST)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இன்றைய போட்டியில் ரோகன் போபண்ணா –யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் குரூ -1 பிளே ஆப் போட்டியில் இடம்பெற்ற இந்திய அணியும், டென்மார்க் அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன.

இந்த நிலையில், இன்றைய போட்டியில்,  இந்திய அணியின் ரோகன் போபண்ணா –யுகி ஜோடி 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றது.

எனவே, டென்மார்க் அணி 2-1 முன்னிலை பெற்றுள்ளது.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாலை டென்மார் நாட்டு வீரர் ரூனே 7-5, 6-3  நேர்செட்களில் வீழ்த்தினார்.

தற்போது, டென்மார்க் அணி 3-1 இந்தியாவை வீழ்த்தியது.
எனவே, இந்திய அணி குரூப்-2 சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளது.