செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (17:04 IST)

தொடரை கைப்பற்ற நம்பிக்கை நட்சத்திரங்களை களமிறக்கிய இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர்குமார் இடம்பெற்றுள்ளனர்.

 
இந்திய அணி இங்கிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது.
 
இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி பொட்டியில் வெற்று பெறும் அணி தொடரை கைப்பற்றும். இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த தினேஷ் கார்த்திக் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தற்போது மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
கே.எல்.ராகுல் இரண்டு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி இதுவரை புவனேஷ்வர் குமார் இருக்கும்போது வேறு பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியதில்லை.
 
ஆனால் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணம் கூறப்பட்டது. தற்போது மூன்றாவது போட்டியை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நம்பிக்கை நட்சத்திரமான புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார்.