வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (06:31 IST)

ஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை பதம் பார்த்தது பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் 8வது போட்டியில் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி, 19.3 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீகாக் 45 ரன்களும், டிவில்லியர்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோஹ்லி 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய பெங்களூரு அணியின் உமேஷ் யாதவ், ஆட்டநாயகன் விருதினை வென்றார்